காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற விவசாயிகள் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது “வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர்களும் அவமரியாதை செய்துள்ளனர்.
அவர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை. போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.