கியூபெக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜனவரி 11ஆம் திகதி வரை அத்தியாவசிய வணிக நிறுவனங்கள் தவிர்ந்து ஏனைய அனைத்தையும் மூடுவதற்கு முதல்வர் பிரான்சுவா லெகால்ட் (François Legault) உத்தரவிட்டுள்ளார்.
கியூபெக்கில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து, சில முடக்கல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதோடு சிவப்பு மண்டலங்களும் வகைப்படுத்தப்பட்டிருந்தன என்று அவர் கூறினார்.
இருப்பினும் தற்போதைய நிலைமையில், மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே சிவப்பு மண்டலங்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளமையால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக இம்மாகாணத்தில் ஆரம்ப பாடசாலைகள் ஜனவரி நான்காம் திகதியும், உயர்நிலைப் பாடசாலைகள் ஜனவரி 11ஆம் திகதியும் மீளத்திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.