கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக ரொரண்டோ பல்கலைக்கழ சுகாதார பிரிவினைச் சேர்ந்த 300பேர் வரையிலானவர்கள் பதிவு செய்துள்ளனர்.
ரொரண்டோ பல்கலைக்கழகத்தின் சுகாதார பிரிவில், வெளிநோயாளர் மருத்துவ மனைகள் மற்றும் நீண்டகால பராமரிப்பு கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையிலேயே அவற்றில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் வெளிநோயாளர் மருத்துவ மனைகளில் கொரோனா தடுப்பூசியை போடுவதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.