கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்கப்படாத மற்றும் அடையாளம் தெரியாத தரப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கனடிய சுகாதாரத்துறை பொதுமக்களைக் கோரியுள்ளது.
விசேடமாக இணைவழிமூலமாக பெறப்படுகின்றன கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபடாத நிலைமைகள் இருப்பதோடு அவை பக்கவிளைவுகளையும், ஆபத்துக்களையும் ஏற்படுத்தவல்லன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசிகளை பெறுவோர் அடையாளமிடப்பட்ட வெளிநோயாளர் பிரிவுகளில் முறையான பதிவுகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் கனடிய சுகாதார துறை மேலும் தெரிவித்துள்ளது.