முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது

742

சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக நேற்றைய நாள் சிரியா சென்றதுடன், அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரண்டு நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

சிரியாவின் உள்நாட்டு போரில் ஈரான் நாட்டு இராணுவ படைகள் சிரியாவின் அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *