சிறிலங்கா அரசாங்கம் தற்போது இன, மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை என்ற விடயத்தை உள்ளடக்குவதன் ஊடாகத்தான் சிறிலங்காவில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சிறிலங்காவில் மீண்டும் இத்தகைய விடயங்கள் மீள நிகழாமைக்கும் பரிகார ரீதியாக அரசியல் தீர்வு அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு தீர்வுகாணும் சூழல் அதன் பின்னரேயே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.