ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வைக்காக நாளை தமிழக முதல்வரால் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணைகளின் முடிவில், ஜெயலலிதா நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை என அறிவித்த உயர்நீதிமன்றம், வழக்கு முடியும்வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.