சமஷ்டி அரசாங்கம், தனியுரிமைச்சட்டத்தினை திருத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விவாதக் கருப்பொருள் சம்பந்தமாக துறைசார் நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான தெரசா ஸ்காஸா (Teresa Scassa) கூறுகையில், பிரதமர் ரூடோ தலைமையிலான சமஷ்டி அரசாங்கம் அரசியல் கட்சிகளை பொறுப்புக்கூறலுடன் வைத்திருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே சமஷ்டி ஆட்சியில் தனியுரிமை ஏற்பாடுகளை திருத்துவதற்கு விளைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமஷ்டி அரசாங்கம் வெளியிட்ட திருத்தங்கள் சம்பந்தமான விடயத்தில், பொதுத்துறையின் தகவல் சேகரிப்பு, பயன்பாடு மற்றும் தனிநபர் தரவுகளை வெளிப்படுத்தல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.