தலிபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், “ஆப்கானிஸ்தான் அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை குழு, தலிபான் பயங்கரவாதிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றத்தையும் காணவில்லை எனக் குறிப்பிட்டார்.
இது அமெரிக்க படையெடுப்புக்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட மிகவும் வித்தியாசமாக தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஆப்கானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை முழுமையாக அகற்றுவதற்கு தீர்மானித்து படிப்படியாக அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆப்பானிஸ்தானில் வன்முறைகள் ஒழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதன் பின்னரே அமெரிக்கப் படைகள் அங்கிருந்தும் வெளியேறும் தீர்மானத்தினை எடுத்திருந்தது.
எனினும் இப்போது நிலைமைகள் மாறியுள்ளதாக அங்கிரு;து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன