வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமுலாக்கப்பட்டள்ளதாக ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் (doug ford) தெரிவித்துள்ளார்.
ரொரண்டோ விமான நிலையத்தில் இதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒன்ராரியோவில் கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விடயத்தில் தாம் இறுக்கமாகச் செயற்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.