நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று கூடிய போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்றச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர், அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் வெறிதாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தராத உறுப்பினரின் ஆசனம் தானாகவே வெற்றிடமானதாக கருதப்படும்,
ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அவர் கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.