முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நேபாள பிரதமரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை

169

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக, அவருக்கு எதிரான அணியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் பிரச்சண்டா – மாதவ் நேபாள் அணியே, பிரதமர் சர்மா ஒளியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக முடிவெடுத்துள்ளது.

கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நிலைக்குழு உறுப்பினர் ஜனார்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

கட்சியிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தது உள்ளிட்ட செயல்களுக்கு சர்மா ஒளியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆனால், அவர் பதில் ஏதும் தராததால் கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனார்தன ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *