முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பாலஸ்தீனத்திற்கான 200 மில்லியன் டொலரிற்கும் அதிகமான உதவி நிதியை அமெரிக்க அதிபர் நிறுத்தியுள்ளார்

590

மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருளாதார உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வழிகாட்டலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பாலத்தீனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஹனான் அஷ்ராவி, அதிபர் டிரம்பின் நிர்வாகம் , அரசியல் ஆயுதமாக ஒரு மலிவான அச்சுறுத்தலை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக டிரம்ப் அறிவித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை பாலத்தீனிய தலைமை நிராகரித்து வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *