பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியானது வாவுனியாவில் நிறைவடைந்து அங்கு இரவுப் பொழுதை பேரணியில் கலந்து கொண்டவர்கள் கழித்து வரும் நிலையில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றின் இலக்கங்களை சேகரித்ததோடு வாகன உரிமையாளர்கள் தொடர்பிலும் தகவல்களை திரட்டியிருந்தார்கள். அதுமட்டுமன்றி சகல வாகங்களையும் புகைப்படம் எடுத்தும் இருந்தனர். இதனால் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் நள்ளிரவைத் தாண்டி முரண்பாடுகள் நீடித்திருந்தன.