கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின், மத உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் கீச்சகப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“கொரோனா அனர்த்தம் பல உயிர்களை பறித்துள்ளது.
மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளை மதித்து, சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, இடமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விடைகொடுக்க முடியும்.” என்றும், அந்தப் பதிவில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.