முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி

248

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்று தொடக்கம், ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வடக்கு மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

இந்நிலையில், கடந்தவாரம் ஏற்பட்ட சில தடங்கல்களால் எமது மருத்துவ சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

அண்மையில், மருத்துவமனை பணியாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சில பிரிவுகள் மூடப்பட்டதோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலைமை விரைவில் சீராக்கப்பட்டு எதிர்வரும் ஐந்தாம் திகதியிலிருந்து யாழ். போதனா மருத்துவமனையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *