மியன்மாருடன் பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பை இரத்து செய்வதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
ஆட்சியதிகாரத்தை அபகரித்துள்ள மியன்மார் இராணுவத்துக்கு எதிராக, தனது உறவை முறித்துக் கொள்வதாக நியூஸிலாந்து ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாடாக அவுஸ்ரேலியா இந்த முடிவினை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மாரீஸ் பெய்ன் (MARIS PINE) கூறுகையில், ‘மியன்மாருடனான இராணுவ பயிற்சி திட்டம் 5 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படுகிறது.
மியன்மாரில் உள்ள அவுஸ்ரேலிய மனிதநேயக் குழு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக இனி செயற்படாது.
அதே வேளையில், அந்நாட்டில் உள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கான உதவிகளை அக்குழு வழங்கும். மியன்மாரில் பலர் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.