அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் (Lloyd Austin), மூன்று நாள் அரசு முறை பயணமாக, இன்று புதுடில்லியைச் சென்றடைந்துள்ளார்.
புதுடில்லியில் அவர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
நாளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின், பேச்சு நடத்த உள்ளார்.
இதன்போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது பற்றியும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்காக கூட்டாகச் செயல்படுவது குறித்தும் அவர்கள் முக்கிய கவனம் செலுத்தவுள்ளனர்.