முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வவுனியாவில் ஏழு பேருக்கு கொரோனா

360

வவுனியாவில் இன்று மட்டும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இவற்றைவிட, வவுனியா கற்குழியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படுவதாக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *