அமெரிக்காவின் புதிய வெளியுறவு செயலரான அன்டனி பிளிங்கன் (Anthony Blingen) சீன வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் யாங் ஜீச்சியை (Yang yechi) தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரு நாட்டின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்
இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் (Net Price) கூறுகையில் ‘‘சீனாவின் ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹொங்கொங்கில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை வெளியுறவு செயலர் வலியுறுத்தினார்.
மேலும் மியான்மரில் நடந்த ராணுவ சதித்திட்டத்தை கண்டித்து சர்வதேச சமூகத்தில் சேர சீனாவுக்கு அவர் அழுத்தம் கொடுத்தார் எனக் கூறியுள்ளார்.