கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் அஸ்ட்ரா ஜெனேகா (Astra Zeneca) தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிரத்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி, டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.
இந்தநிலையில், அஸ்ட்ரா ஜெனகா (Astra Zeneca) தடுப்பூசி பாதுகாப்பானது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது. இந்தியா முதல் அமெரிக்கா, இங்கிலாந்து என பல இடங்களில் இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.