இந்தியாவின் டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவின் டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்கள் இலக்காக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் சிலர் எல்லை கோட்டு வழியாக காஷ்மீருக்குள் நுழைந்து இருக்கலாம் என்று உளவுத்துறை மத்திய அரசிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.