முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா-பாகிஸ்தான் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்

646

இந்தியா-பாகிஸ்தான் இடையில் தடைப்பட்டுப் போயுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்திய பிரதமரிடம் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கானிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் பிதமர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்றும் குறித்த அந்த கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *