ஆசிய இனத்தவர்களுக்கு எதிரான இனவாதம் அதிகரித்துள்ளமை மற்றும், வட அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து கனடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கனடிய நாடாளுமன்றத்தின் பொதுச் சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, இந்த பிரேரணையை முன்வைத்தார்.
அட்லான்டாவில் செவ்வாய்க்கிழமை வெள்ளையின துப்பாக்கிதாரியினால், ஆசிய அமெரிக்கப் பெண்கள் ஆறு பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் ஆதரவுடன் இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.