இரண்டு இந்திய சரக்கு கப்பல்கள் சீன துறைமுகத்தில், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு இந்திய சரக்கு கப்பல்கள், சீன துறைமுகத்தில், பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருக்கும் பொருட்களை இறக்க, சீன அதிகாரிகள், அனுமதி வழங்கவில்லை என்றும், இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.
இந்த விவகாரத்திற்கும், இருதரப்பு உறவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.