கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு, 22 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, மற்றும் கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை, வழங்குமாறு 22 நாடுகள் கேட்டுள்ளன.
ஏற்கனவே 15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதில், 56 இலட்சம் மருந்துகள் கொடையாகவும், ஒரு கோடி 5 இலட்சம் மருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன’ என்றும் தெரிவித்துள்ளார்.