சிரியாவில் ரஷ்யப் படைகள் நடாத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
இந்த தகவலை பிரித்தானியாவைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்பு குழு ஒன்று வெளியிட்டுள்ளது.
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ரஷ்யப் படைகள் சிரியாவின் தென் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்றும், இதில் வியாழக்கிழமை ரஷ்யப் படைகள் அல் செஃப்ரா பகுதியில் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அது விபரம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் இதில் மேலும் பலர் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பலியானவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட வில்லை என்று சிரிய அதிபர் ஆசாத்துக்கு ஆதராவ தாக்குதல் நடாத்திவரும் ரஷ்யா கூறியுள்ளது.