சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“ 2009ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் அல்ல, மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம்.
எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.