ஒன்ராரியோவின் அலெக்சான்ரா பார்க்கில் (Alexandra Park) உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்று மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்தே இல்லத்தினை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் ஏனையவர்கள் தங்கள் உடல்நிலையில் மாற்றங்களை அவதானித்தால் உடனடியாக தெரியப்படுத்துவதோடு தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு தாமதமின்றி உள்ளாக்குமாறும் கோரப்பட்டுள்ளது