முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சுற்றுலா கடற்கரையை அகற்றக் கோரி தொண்டைமானாறு மக்கள் போராட்டம்! – பொலிசாருடன் மக்கள் முறுகல்

964

தொண்டைமானாறு அக்கரை கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி, பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. இச்சம்பவத்தை தனது புகைப்படம் எடுத்த இளைஞன், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடையை பொலிஸார் அகற்றியபோதே முறுகல் நிலை தோன்றியுள்ளது. வலி. கிழக்கு பிரதேச சபையால் அமைக்கப்பட்ட அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் தொடர்ந்து கலாசார சீரழிவுகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்து, சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது கடற்கரைக்கு செல்லும் வீதியில் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அகற்றுமாறு, வலி. கிழக்கு பிரதேச சபை, அச்சுவேலி பொலிஸாரிடம் கோரியதையடுத்து, பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்று வீதித்தடைகளை அகற்றியுள்ளனர். இதனையடுத்தே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் தோன்றியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *