டெல்லிக்கும் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவைக்காக கையகப் படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு விமான சேவை தொடங்குவதற்காக புதிய விமான வழித்தடம் அமைக்கப்பட்ட ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
எனினும் இந்த நிலங்களை கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படாததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நேற்று ஒன்று கூடிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்;.
டெல்லி நொய்டா நேரடி விமான சேவை நடைபெறும் விமான வழித்தடத்தில் தொடங்கிய இந்த போராட்டம் டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது.
இன்று இரண்டாவது நாளாக தொடரும் இப்போராட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்.
அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில்; போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.