அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் அவ்விதமான பக்கவிளைவுகள் எதனையும் அஸ்ட்ராசெனெகா ஏற்படுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக லண்டனில் அஸ்ட்ராசெனெகா(AstraZeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) தடுப்பூசியை கனடா கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் அது தொடர்பில் விசேட கரிசணைகளைக் கொண்டிருந்தது.
தற்போது, ஆய்வுகள் மூலம் அவ்விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில் கனடாவிலும் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.