முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் 100,000 களப்பணியாளர்கள் தயார்

274

தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு இலட்சம் களப்பணியாளர்கள் தயாராகவுள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் புத்தாண்டின் முதல் மாதத்திலேயே தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான களப் பணியாளர்கள், போக்குவரத்து வசதியுடன் தயாராக இருக்குமாறு மாநில அரசுகள், மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *