தமிழகத்தில் இன்று இரவு ஏழு மணியுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றன.
பிரசாரம் நிறைவடையும் இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் ஏழு மணிக்கு முன்னதாக அந்தந்த தொகுதி வேட்பாளர்களை தவிர பிரசாரத்திற்காக வருகை தந்த ஏனைய அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்புக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு முக்கிய நகரங்களில் பாதுகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,தமிழகத் தேர்தல் நடைபெறும் ஏக காலத்திலேயே கேரளாவிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.