முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் மேலும் 30பேர் நாடு திரும்பவுள்ளனர்

1284

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் மேலும் 30பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் ஏற்கனவே தாயகம் திரும்பியுள்ள நிலையில், மேலும் 30 பேர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் நாள் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாகவும், அவர்களுள் 13 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி விபரம் வெளியிட்டுள்ளார்.

மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30 பேரே அவ்வாறு நாடு திரும்பவுள்ளதாகவும், நாடுதிரும்பவுள்ள அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்ற ப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான இலவச விமான பயணச் சீட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலையத்தால் வழங்கப்படும் அதேவேளை, அவர்களுக்கான ஆரம்பகட்ட வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக மீள்குடி யேற்ற அமைச்சு விளக்கமளித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *