தமிழக அரசின் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதுவராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நாள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட மாநில அளவில் பரதப்புரையினைத் தொடக்கி தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விலேயே ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதுவராக திரைப்பட நடிகர் விவேக்கை நியமித்துள்ளார்.
தம்மை ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரைக்கான விளம்பர தூதராக நியமித்ததற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு நடிகர் விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.