தமிழகத்தில் வரும், 19ஆம் திகதி 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் என்றும், வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாரத்தின் ஆறு நாட்கள் பாடசாலைகள் செயற்படும் என்றும், ஆனால், மாணவர்கள் விரும்பினால் மட்டுமே, பாடசாலைக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம் எனவும், மாணவர்களின் வருகையை பாடசாலைகள் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது.