கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய சிறிலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 147 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 577ஆக உயர்வடைந்துள்ளது.