கடந்த 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிலஙகா கடற்படை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவரும் இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிணை தொகையினை செலுத்த தவறிய காரணத்தால் அவர்கள் இவ்வாறு மீண்டும விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு இன்று மீண்டும் கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது , சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் தொடர்பில் சாட்சி விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் தி்ணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் நாள்க்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.