ஆப்கானிஸ்தானில் உள்ள, பதக்சான் (Badakhshan) மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில், 14 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
பதக்சான் (Badakhshan) பகுதியில் அண்மையில் பனிப்பொழிவுகள் அதிகரித்திருந்த நிலையில், மலைப் பிரதேசத்தில் உள்ள சாலை ஒன்றில் இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீட்புக் குழு ஒன்றும், உள்ளூர் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.