ஒன்ராரியோவின் பீல் பிராந்தியத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஓரிரு பாடசாலைகள் மட்டுமே காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பாடசாலைகளையும் மூடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பீல் பிராந்திய சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றுக்குட்பட்ட மாணவர்கள், மற்றும் பாடசாலை ஊழியர்கள் தொடர்ச்சியாக மருத்துவ துறையினரின் கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.