பிரிட்டிஸ் கொலம்பிய வீடு விற்பனைத் துறையில் பாரியளவில் நிதிச் முறைகேட்டுடின் மூலம் பணம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில சட்டக் குறைபாடுகளினால் மாகாண வீட்டு விற்பனைச் சந்தை நடவடிக்கைகளில் குற்றாவளிகள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டில் பிரிட்டிஸ் கொலம்பிய வீட்டு விற்றனைச் சந்தையில் 5.3 பில்லியன் டொலர்கள் நிதிச் முறைகேட்டின் ஊடான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதிச் முறைகேட்டு;க் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் தலையீடு காரணமாகவே மாகாணத்தின் வீட்டு விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு வீட்டுக் கொள்வனவுகளின் மொத்தப் பெறுமதியில் ஐந்து சதவீதம் நிதிச் முறைகேட்டின் ஊடாக முதலீடு செய்யப்பட்ட பணம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.