புரவி சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரையான வேகம் கொண்ட இந்தச் சூறாவளியானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாளை காலை வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளி மண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.