பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடமபெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியே இது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்தப் பேரணி மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.