ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக ஒன்ராரியோவுக்கு வழங்குமாறு மாகாண முதல்வர் டக்போர்ட் புதிதாக பதவி ஏற்கனவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடனிடத்தில் கோரியுள்ளார்.
ஜோ பைடன் தான் பதவி ஏற்றதும் அடுத்த நூறு நாட்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது தொடர்பான திட்டத்தினை நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கனடாவிலும், அடுத்தகட்ட கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு 50சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் சில மாகாணங்கள் இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி விநியோகத்தினை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன.
அதேநேரம், ஒன்ராரியோவிலும் அவ்விதமான நிலைமைகயே நீடிக்கின்றன.
இந்நிலையிலேயே அவர் இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது