இலங்கையில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியும், இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லுமாறு கோரியும் மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு- கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்த கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள், பல்கலைகக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனா.
கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி, ரயில் சந்தி ஊடாக தாண்டவன்வெளி சந்தியை அடைந்து திருமலை வீதியூடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவை நோக்கி சென்றது.
இதேவேளை, இந்தப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம்;, திருகோணமலை, கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.