முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முதல்வருக்கு இரண்டு பக்க கடிதம்

240

ஒன்ராரியோ மாகாணத்தின் முற்போக்கு கன்சர்வேட்டிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ரோமன் பாபர் (Roman Baber) கடுமையான விமர்சனங்களை முன்வைத்து முதல்வர் டக்போர்ட்டிற்கு இரண்டு பக்க கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒன்ராரியோ முழுவதும் வீட்டுக்குள்ளே தங்கியிருக்கும் உத்தரவு இடப்பட்டுள்ளமையை கடுமையான விமர்சித்துள்ளார். இவ்வாறான உத்தரவு கொரோனாவை விடவும் ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வணிக நிலையங்கள் உள்ளிட்டவையை மூடியுள்ளமையானது பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைப்பதற்கு சமனானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய முடக்கல் உத்தரவுகளால் மக்களின் வாழ்க்கை முறையானது மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் தற்கொலைகள் தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *