கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 85 சதவீத உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
மேற்கு முனையத்தை பெற்றுக் கொள்வதற்கு இந்திய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு முனையத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சியை மேற்குமுனைய விவகாரத்திலும் முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.