ரொறன்ரோ சன்னிபுரூக் (Sunnybrook) சுகாதார விஞ்ஞான மையத்தில், தற்காலிக கள மருத்துவமனை ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்பதால், சன்னிபுரூக் (Sunnybrook) சுகாதார விஞ்ஞான மையத்தில், வாகனத் தரிப்பிடத்தில் இந்த தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை 100 படுக்கைகளைக் கொண்டதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்றாளர்களின் பராமரிப்புக்குத் தேவையான, செயற்கை சுவாசக் கருவிகள், பிராணவாயு இயந்திரங்கள், நடமாடும், எக்ரே இயந்திரங்கள், எதிர்மறை அமுக்க கருவி என்பன உள்ளிட்ட வசதிகளையும் அந்த மருத்துவமனை கொண்டிருக்கும்.
இந்த மருத்துவமனைக்கான கூடாரங்களை அமைக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.