முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு மற்றும் திருமலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

233

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எட்டுப் பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏழு பேருக்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய 5 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் அந்த பிரிவில் நோயாளர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களை பார்வையிடுவதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரேமானந்த் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *